இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தில் இரண்டாம் பாகம் ‛புஷ்பா-2 ; தி ரூல்ஸ்' என்கிற பெயரில் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகம் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது. சமீப நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னை, கொச்சி, மும்பை என மாறி மாறி நடைபெற்று வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் வெளியான புஷ்பா 2 டிரைலரை பார்த்துவிட்டு நடிகை மாளவிகா மோகனன் அல்லு அர்ஜுனை வானளாவ புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புஷ்பாவில் அல்லு அர்ஜுன் எந்த அளவிற்கு பென்டாஸ்டிக் ஆக இருந்தார் என்பதிலேயே நான் அடித்து செல்லப்பட்டு விட்டேன். அவரது கம்பீரம், அவரது ஸ்டைல், அவரது நடனம் எல்லாமாக சேர்ந்து புஷ்பா-2வை நோக்கி ஆவலுடன் காத்திருக்க வைத்துவிட்டன. இது 'தகிடாலே டைம்' என்று கூறியுள்ளார். அவரது கமெண்ட்டுக்கு, “தேங்க்யூ டியர் அனைவருக்குமே இந்த படம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று பதில் அளித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்து விட்ட மாளவிகா மோகனன் தற்போது தெலுங்கில் முதன்முறையாக பிரபாஸுக்கு ஜோடியாக ராஜா சாப் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் தீவிரமாக கால் பதிக்கும் முயற்சியாக அல்லு அர்ஜுனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லி அவரது கவனத்தை ஈர்க்க மாளவிகா மோகனன் முயற்சித்து இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர்.