ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் 'புஷ்பா 2' படம் வருகிற 5ம் தேதி வெளியாகிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ஆந்திரா, தெலுங்கானாவில் முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் 'ஸ்பெஷல் பிரிமியர் ஷோ' என்ற பெயரில் 4ம் தேதி (நாளை இரவு) 9 மணிக்கு முக்கியமான மால் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இந்த ஸ்பெஷல் ஷோவிற்கான கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர். அதன்படி அதிகபட்சமாக 1200 ரூபாய் வரை டிக்கெட் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பையில் பிவிஆர் சினிமாஸ் 5ம் தேதி 450 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்கிறது. ஸ்பெஷல் காட்சிக்கான கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்து வருகிறது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள அம்மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.