சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகம் 'புஷ்பா - தி ரைஸ்' என்ற பெயரில் வெளியான நிலையில், இரண்டாவது பாகம், ‛புஷ்பா-2 ; தி ரூல்ஸ்' என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 2வது பாகத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் 3வது பாகம் பற்றிய 'அப்டேட்' தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு பாகங்களுடன் புஷ்பா படம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3வது பாகமும் வர இருப்பது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சென்னையில் சமீபத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா பேசுகையில், ''புஷ்பா படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதையோ மிஸ் பண்ணும் உணர்வு எனக்குள் வந்தது. என் வாழ்க்கை புஷ்பா படத்திற்கு சமம். பாகம் 1, பாகம் 2 மற்றும் பாகம் 3'' என பேசியிருந்தார்.
இந்த நிலையில், படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் முடிந்ததை குறிக்கும் வகையிலான ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்டோர் நிற்க, பின்புற திரையில் 'புஷ்பா-3: தி ராம்பேஜ்' என்ற புகைப்படம் தெரிகிறது. இதனை வைத்து பார்க்கையில் 'புஷ்பா 3' படம் நிச்சயம் வரும் என்பது தெளிவாகிறது. 2வது பாகம் வெளியாவதற்கு முன்பே வெளியான இந்த 3வது பாகம் பற்றிய மறைமுக அப்டேட், 'புஷ்பா 2' மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.