சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பல கதைகள் கொண்ட ஒரே திரைப்படத்தை அந்தாலஜி வகை படம் என்கிறோம். தற்போது அந்த மாதிரியான படங்கள் அதிகமாக வருகிறது. குறிப்பாக ஓடிடி தளத்திற்காக அவைகள் தயாரிக்கப்படுகிறது. கடைசியாக 'இறுகப்பற்று' என்ற படம் வந்தது. ஆனால் இந்தியாவிலேயே முதல் அந்தாலஜி படம் தமிழில்தான் தயாரானது. 'சிரிக்காதே' என்ற தலைப்பில் வெளிவந்த இந்த படத்தில் யம வாதனை, அடங்காப்பிடாரி, புலிவேட்டை, போலிச் சாமியார், மாலை கண்ணன் என்ற தலைப்பில் 5 கதைகள் இடம் பெற்றது. அனைத்துமே நகைக்சுவை கதைகள்.
என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கொத்தமங்கலம் சுப்பு, வி.எம்.ஏழுமலை, டி.எஸ்.துரைராஜ், எம்.எஸ்.முருகேசன், பி.எஸ்.ஞானம் எனப் பலர் இதில் நடித்திருந்தனர். ஸ்ரீ ரஞ்சனி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார்.
'அடங்காப்பிடாரியை' ஆர். பிரகாஷ் இயக்க டி. மணி ஐயர், டி. கிருஷ்ணவேணி, கே.என்.ராஜம், கே.என்.கமலம், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் நடித்தனர். 'மாலைக் கண்ணனை' ஜித்தன் பானர்ஜி இயக்கினார். அதில் எம்.எஸ்.முருகேசன், இ.கிருஷ்ணமூர்த்தி, பி.சாமா, பி.எஸ்.ஞானம், நாகலட்சுமி, ராதா பாய், மீனாட்சி ஆகியோர் நடித்தனர். யம வாதன் படத்தையும் பானர்ஜியே இயக்கினார்.
'போலிச் சாமியார்' படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.எஸ்.துரைராஜ், எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நடித்திருந்தனர். 5 கதைகளும் சென்னையில் இருந்த நியூட்டன் ஸ்டூடியோவில் ஒரே நேரத்தில் படமானது. படம் 1939ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.