ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மேஜர் சுந்தர்ராஜன் என்றாலே ஆங்கிலம் கலந்து பேசும் அந்த கண்டிப்பான அப்பா கேரக்டர்கள்தான் நினைவுக்கு வரும். சிவாஜியின் நெருங்கிய நண்பரான இவர் சிவாஜியை போன்று நாடகத்தில் இருந்து வந்தவர். ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஓய்.ஜி.பார்த்தசாரதியின் நாடக கம்பெனியில் கம்பெனி நடிகராக இருந்தார். தொலைபேசி துறையிலும் பணியாற்றினார். அவர் நடித்து வந்த 'சர்வர் சுந்தரம்' நாடகத்தை பே.பாலச்சந்தர் திரைப்படமாக்கியபோது அதில் அவர் நடித்த தந்தை கேரக்டரை சினிமாவிலும் நடித்தார்.
அதன் பிறகு அவர் 90 சதவிகித படங்களில் தந்தை கேரக்டரில்தான் நடித்தார். ஆனால் அவர் சில படங்களை இயக்கினார் என்பது பலருக்கு தெரியாது. சிவாஜி நடித்த 'கல்தூண்' படத்தின் மூலம் இயக்குனரானார். 'கல்தூண்' என்ற நாடகத்தையே திரைப்படமாக இயக்கினார். சிவாஜி, கே.ஆர்.விஜயா, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், திலக் ஆகியோருடன் மேஜர் சுந்தர்ராஜனும் நடித்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதன் பிறகு ஊரும் உறவும், நெஞ்சங்கள், இன்று நீ நாளை நான் படங்களை இயக்கினார். கடைசியாக கமல் நடித்த 'அந்த ஒரு நிமிடம்' படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் இயக்கவில்லை.