ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழகத்தில் சுமார் 1000 தியேட்டர்கள் உள்ளன. முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்கள் தான் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும். ஆனால், மற்ற மொழிகளிலிருந்து டப்பிங் ஆகி வரும், குறிப்பாக தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வரும் படங்களுக்கு அவ்வளவு தியேட்டர்கள் கிடைக்காது.
ஆனால், முதல் முறையாக தமிழ்ப் படங்களுக்கு இணையாக 'புஷ்பா 2' படம் இன்று(டிச., 5) வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 800 தியேட்டர்களில் இப்படத்தைத் திரையிட்டுள்ளார்கள். மற்ற மொழிகளிலிருந்து இங்கு டப்பிங் ஆகி வரும் ஒன்று இவ்வளவு தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறை.
படத்திற்கான முன் பதிவு சுமாராக இருந்தாலும் படத்திற்கான விமர்சனங்கள் வந்த பிறகு வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.