ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

சின்னத்திரை நடிகரான நேத்ரன் சில தினங்களுக்கு முன் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். இந்நிலையில், சக நடிகரும் நண்பருமான வருண் உதய் நேத்ரன் குறித்து உருக்கமான சில செய்திகளை கூறியிருக்கிறார். அவர் பேசியபோது, 'நேத்ரனுடன் நான் பல சீரியல்களில் இணைந்து நடித்துள்ளேன். சூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் கோபப்படமாட்டார். எப்போதும் பாசிட்டிவாக பேசுவார். அவர் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார். இப்போது தான் கொஞ்சம் முன்னேறி வந்தார். நேத்ரனுக்கு சொந்த வீடு கூட கிடையாது. அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தார். அவருக்கு உடம்பு சரியில்லை என்று பார்க்க வருவதாக சொன்னோம். ஆனால், மறுத்துவிட்டார். ஆனால், சில தினங்களுக்கு முன் அவரது மகள் பிறந்தநாளுக்கு வீட்டுக்கு அழைத்தார். அவருக்கு உடநிலை சரியில்லாமல் இருந்தால் கூட அனைவருக்கும் மோடிவேஷ்னலாக பாசிட்டிவாக மெசேஜ் அனுப்புவார். ஆனால், அவரது மொபைலிலிருந்து அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி வந்தது ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது' என்று கூறியிருக்கிறார்.