ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தொகுப்பாளினி, இன்ஸ்டாகிராமர், ஆக்டர் என பல பரிமாணங்களில் ஜொலிப்பதுடன், கண்ணே கலைமானே, அடுத்த சாட்டை போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கும் ஒரு இடமுண்டு என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ஷீலா அனு. குமரிமாவட்டம் நாகர்கோவிலில் பிறந்து தன் முயற்சியால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளார்.
அவர் பேசியதிலிருந்து...
பெண்கள் சினிமாத்துறைக்கு செல்கிறார்கள் என்றாலே குடும்பத்தில் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். ஆனால் நான் சிறிய வயதிலேயே பாட்டும், டான்சுமாக இருந்ததால் சினிமாத்துறையில் கால் பதிக்க முயற்சித்த போது ஓ.கே., சொல்லி விட்டனர் அப்பாவும், அம்மாவும்.
சினிமாவை மனதில் வைத்து நாகர்கோவிலில் பள்ளி படிப்பு முடித்ததும் தனியார் சேனலில் தொகுப்பாளினியாக சேர்ந்தேன். அப்போது மலையாள சினிமா இயக்குனர் ஜான் கெட்டி படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். இதற்கிடையில் ஈரமான ரோஜாவே சீரியல் வாய்ப்பும் வந்தது. அதில் காதுகேளாத பெண்ணாக அப்பாவி கேரக்டரில் நடித்தேன். அது எனக்கு பிரேக் பெற்று கொடுத்தது. எங்கு சென்றாலும் அந்த சீரியலில் நான் நடித்த தேன்மொழி கதாபாத்திரம் பெயரை குறிப்பிட்டு மக்கள் அடையாளம் கண்டு வரவேற்பு கொடுத்தனர்.
பிறகு உதயநிதி நடித்த கண்ணே கலைமானே படத்தில் அவரது தாய் மாமா பெண் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது தமிழ் சினிமாவில் ஒரளவு பெயர் பெற்று கொடுத்தது. சமுத்திரகனி நடித்த அடுத்தசாட்டை, சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன், நாடோடி 2 உள்ளிட்ட படங்களில் வாய்ப்பு கிட்டியது. லைசென்ஸ் படத்தில் முக்கிய கேரக்டரிலும், பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளேன்.தற்போது யோகிபாபு நடிக்கும் சன்னிதானம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். மேலும் ஒரு சீரியல், ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை போய் கொண்டுள்ளது. அம்மா திருவனந்தபுரம் என்பதால் மலையாள படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வருகிறது.
இந்தளவுக்கு நான் நடிக்க காரணம் நடிகர் தனுஷ் தான். பள்ளியில் படிக்கும் போதே தனுஷ் படங்களை விடாமல் பார்த்து விடுவேன். புத்தகங்களில் அவரது படங்களை ஒட்டி வைத்து கொள்வேன். அவர் படத்தில் நானும் ஒரு கேரக்டரிலாவது நடிக்க ஆசை. ஒரு முறை மும்பை ஷூட்டிங் ஒன்றில் அவரை சந்தித்தேன். ஆனால் பேச முடியவில்லை.
என்னை பார்க்கும் எல்லோருமே பிட்னஸ் ரகசியம் என கேட்கின்றனர். நான் பிட்னஸ்க்காக எதுவும் செய்வதில்லை. உயரத்திற்கு ஏற்ப எடை இருப்பதால் அதில் அக்கறையும் காட்டுவதில்லை. போதியளவு உணவு எடுத்து கொள்வேனே தவிர அதிகமாக எடுத்து கொள்வதில்லை. மீன் குழம்பு என்றால் ஒரு பிடி பிடித்து விடுவேன். ஓய்வு கிடைத்தால் எல்லா கோயில்களுக்கும் சென்று விடுவேன். ஊரில் இருக்கும் போது வார சனிக்கிழமைகளில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலுக்கு சென்று விடுவேன். வருங்கால தலைமுறையினர் ஷீலா அனு என ஒரு நடிகை இருந்திருங்காங்க என பேசுமளவுக்கு பெயர் எடுத்தால் போதும். அதுதான் என் ஆசை என்றார்.