ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான 'புஷ்பா 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திலும் நாயகன் அல்லு அர்ஜுன், நாயகி ராஷ்மிகா மற்றும் வில்லன் பஹத் பாசில் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் பஹத் பாசிலுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கான காட்சிகளும் ரொம்பவே மாஸாக அமைந்திருந்தன. அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகை ருஹானி சர்மா புஷ்பா 2 திரைப்படம் பார்க்க தனது குடும்பத்தினருடன் திரையரங்கிற்கு சென்றுள்ளார். பஹத் பாசிலின் அறிமுகக் காட்சியில் அவர் வரும்போது அவர்தானா என்று ருஹாணி சர்மாவுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டதாம்.. அருகில் அமர்ந்திருந்த தனது சகோதரரிடம் இது பஹத் பாசில் தானே என்று கேட்டு தெரிந்து கொண்டாராம்.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ருஹாணி சர்மா, “நான் பஹத் பாசிலின் தீவிர ரசிகை. இந்தப்படத்தில் அவரது என்ட்ரிக்காக ரொம்பவே ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தேன். அதுவும் கடைசியில் நிகழ்ந்தது. ஆனால் என்னால் உடனடியாக அதை உணர முடியவில்லை. அதன் பிறகு அருகில் இருந்த என் சகோதரரிடம் இது பஹத் பாசில் தானே என்று கேட்டு தெரிந்து கொண்டேன். அந்த அளவிற்கு பஹத் பாசில் தனது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன்னை வித்தியாசமான உருமாற்றம் செய்து கொள்கிறார். அந்த காட்சியை பார்த்ததும் எனக்கு புல்லரித்தது” என்று கூறியுள்ளார்.