எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் |
எத்தனை விதமாக தடுக்க முயற்சி செய்தாலும் நாளுக்கு நாள் முன்னேறும் தொழில்நுட்பங்கள் காரணமாக சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பிரபலங்களை குறி வைத்து தான் விஷமிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு முன்பாக பல பிரபலங்களும் தங்களது இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) கணக்குகள் தான் ஹேக் செய்யப்பட்டதாக கூறியதை பார்த்து உள்ளோம். தற்போது ஆச்சரியமாக பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு எர்லகடா ஆகியோரின் வாட்ஸ் அப் கணக்குகள் சில மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய பாகுபலி தயாரிப்பாளர் ஷோபு எர்லகடா தனது எக்ஸ் வலைதளப் பக்கம் மூலமாக தனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது வாட்ஸ்அப் கணக்கும் யாராலோ ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும் தயவு செய்து தன் பெயரில் ஏதேனும் மெசேஜ் வந்தால் அதை நம்பவோ பெரிதுபடுத்தவோ வேண்டாம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தனது நண்பர்கள், உறவினர்கள் வட்டத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார். சந்தோஷ் சிவனின் உதவியாளர் வாட்ஸ்அப் கணக்கும் சேர்ந்து ஹேக் செய்யப்பட்டுள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.