இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
புதுக்கோட்டை மாவட்டம், குருக்களையாப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவன் விஷ்ணு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10வது சீசனில் முதல்கட்ட ஆடிஷனில் தேர்வாகி மேடையேறும் வாய்ப்பை பெற்றிருந்தார். நிகழ்ச்சியின் முதல்நாளில் 'அத்தை மக உன்ன நினைச்சு அழகு கவித எழுதி வச்சேன்' பாடலை சிறுவன் விஷ்ணு பாடியதை கேட்டு நடுவர்களாக இருந்த பாடகர்கள் மனோ, சித்ரா, இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்டோர் பாராட்டினர்.
நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், தன்னுடைய குருக்களையாப்பட்டி கிராமத்தில் குடிதண்ணீருக்கே வழியில்லை என்பதை குறிப்பிட்டு பேசியிருந்தார். இது பலரையும் வருத்தப்பட செய்திருந்தது. சிறுவனின் இந்த கவலையை கோரிக்கையாக ஏற்ற நடிகர் ராகவா லாரன்ஸ், சிறுவனின் கிராமத்திற்கு உதவ முடிவு செய்தார். அதன்படி, உடனடியாக அந்த கிராம பஞ்சாயத்து மற்றும் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ஆழ்குழாய் தோண்டி, அந்த கிராம மக்களுக்கு குடிதண்ணீர் வசதிக்கு வழிவகுத்துள்ளார்.
கிராமத்து மக்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று குடிதண்ணீர் எடுத்து வந்த நிலையில் லாரன்சின் இந்த உதவியால் கிராமத்திற்கே தண்ணீர் வசதி கிடைத்துள்ளது. சிறுவனின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய லாரன்ஸ்க்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் அனைத்தும் வரும் டிசம்பர் 14, 15 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ராகவா லாரன்ஸ் பங்குபெறும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது.