50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
புதுக்கோட்டை மாவட்டம், குருக்களையாப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவன் விஷ்ணு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10வது சீசனில் முதல்கட்ட ஆடிஷனில் தேர்வாகி மேடையேறும் வாய்ப்பை பெற்றிருந்தார். நிகழ்ச்சியின் முதல்நாளில் 'அத்தை மக உன்ன நினைச்சு அழகு கவித எழுதி வச்சேன்' பாடலை சிறுவன் விஷ்ணு பாடியதை கேட்டு நடுவர்களாக இருந்த பாடகர்கள் மனோ, சித்ரா, இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்டோர் பாராட்டினர்.
நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், தன்னுடைய குருக்களையாப்பட்டி கிராமத்தில் குடிதண்ணீருக்கே வழியில்லை என்பதை குறிப்பிட்டு பேசியிருந்தார். இது பலரையும் வருத்தப்பட செய்திருந்தது. சிறுவனின் இந்த கவலையை கோரிக்கையாக ஏற்ற நடிகர் ராகவா லாரன்ஸ், சிறுவனின் கிராமத்திற்கு உதவ முடிவு செய்தார். அதன்படி, உடனடியாக அந்த கிராம பஞ்சாயத்து மற்றும் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ஆழ்குழாய் தோண்டி, அந்த கிராம மக்களுக்கு குடிதண்ணீர் வசதிக்கு வழிவகுத்துள்ளார்.
கிராமத்து மக்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று குடிதண்ணீர் எடுத்து வந்த நிலையில் லாரன்சின் இந்த உதவியால் கிராமத்திற்கே தண்ணீர் வசதி கிடைத்துள்ளது. சிறுவனின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய லாரன்ஸ்க்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் அனைத்தும் வரும் டிசம்பர் 14, 15 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ராகவா லாரன்ஸ் பங்குபெறும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது.