ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'மாநகரம்' படத்தில் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' போன்ற படங்களை இயக்கியவர், தற்போது ரஜினி நடிப்பில் 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்ததும் கார்த்தி நடிப்பில் 'கைதி-2' படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ், ''ஒரு காலத்தில் கமல்ஹாசனை நேரில் பார்ப்பதே எனக்கு மிகப்பெரிய கனவாக இருந்து வந்தது. அப்படிப்பட்ட அவரை வைத்து ஒரு படம் இயக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன். அது விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம்,'' என்று தெரிவித்தார். கூலி படத்தை அடுத்து கைதி-2 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம்-2 படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.