ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படத்தில் நடித்துள்ள சூர்யா, அதன் பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். சூர்யாவின் 45 வது படமான இப்படத்தின் பூஜை கோவையில் உள்ள ஆனைமலை மாசானியம்மன் கோவிலில் துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பும் அந்த பகுதியிலேயே நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் மௌனம் பேசியதே, ஆறு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் த்ரிஷா திரை உலகில் நடிக்க வந்து 22 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அவர் சூர்யா 45 வது படத்தில் நடிப்பதை அப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் நிறுவனம் ஒரு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதோடு படப்பிடிப்பு தளத்தில் அவர் 22 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு சூர்யா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அதை கேக் வெட்டி கொண்டாடினர்.