வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

மலையாள திரையுலகில் பிக் பி, அன்வர், வரதன், காம்ரேட் இன் அமெரிக்கா, ஐயூப்பின்டே புத்தகம் உள்ளிட்ட பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் அமல் நீரத். இவரது இயக்கத்தில் சமீபத்தில் போகன் வில்லா என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் தலைநகரம், நான் அவன் இல்லை பட புகழ் நடிகை ஜோதிர்மயி நடித்திருந்தார். இந்த படத்திற்காக மொட்டை எல்லாம் அடித்து சில காட்சிகளில் குட்டை தலை முடியுடன் என தனது தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்டி இருந்தார் ஜோதிர்மயி. இந்தப் படத்தின் இயக்குனர் அமல் நீரத் இவரது கணவரும் கூட. அது மட்டுமல்ல இந்த படத்தை பஹத் பாசிலும் அமல் நீரத்தும் இணைந்து தான் தயாரித்திருந்தனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு சுவாரசிய சம்பவம் குறித்து ஜோதிர்மயி கூறும்போது, “நானும் பஹத் பாசிலும் நடிக்கும் காட்சிகளை படமாக்கிய போது ஒரு முறை சீரியஸ் ஆன காட்சியில் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே அடிக்கடி சிரித்து விட்டோம். இதனால் அந்த காட்சியை பலமுறை எடுக்க வேண்டி இருந்தது. இதனால் கோபமான இயக்குனர், என் கணவர் அமல் நீரத் எங்களிடம் வந்து, ரெண்டு பேரும் கொஞ்சம் சீரியஸ் ஆக இருங்கள். நீங்கள் இருவரும் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதை மறந்து விடாதீர்கள்” என்று சொன்னார். அதன் பிறகு தான் நாங்கள் கொஞ்சம் சீரியஸ் ஆகி அந்த காட்சியில் நடித்து முடித்தோம்” என்று கூறியுள்ளார்.