ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேசமயம் இந்த படம் வெளியான நாளன்று முதல் நாள் ரசிகர் காட்சி பார்க்க வந்த ஹைதராபாத்தை சேர்ந்த ரேவதி என்ற பெண் தியேட்டர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி அந்த தியேட்டருக்கு படம் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தான் இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் அவர் இந்த வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கிடைப்பதில் சற்று தாமதமானதால் ஒருநாள் இரவு முழுவதும் அவர் சிறையில் தங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மறுநாள் காலை அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பல நட்சத்திரங்களும் சில அரசியல்வாதிகளும் இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும் பின்னர் அவர் விடுதலை குறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக இது போன்ற விஷயங்களில் கிண்டலுடன் கருத்துக்களை தெரிவிக்கும் சர்ச்சை புகழ் இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த கைது குறித்து கூறும் போது, “ஏற்கனவே புஷ்பா-2 படம் வெற்றி படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படியும் கைது செய்தாலும் உடனே அவர் ஜாமீனில் வரப்போகிறார் என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அப்புறம் எதற்காக இந்த கைது என்றால் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது வார கலெக்ஷனும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் நினைத்து விட்டார் போலும். எப்படியோ ஏற்கனவே பிரபலமாக இருந்த அல்லு அர்ஜுனை இந்த கைது நடவடிக்கை மூலம் இன்னும் மெகா பிரபலம் ஆகிவிட்டார். இரண்டாவது வார கலெக்ஷனுக்கும் வசதி செய்து கொடுத்துவிட்டார்” என்று கிண்டலாக கூறியுள்ளார்.