சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசேன் (வயது 73), உடல்நலக் குறைவால் காலமானார். ஜாகிர் உசேனுக்கு கடந்த ஒரு வார காலமாக இதயம் தொடர்பாக, பிரச்னை இருந்தது. அவர், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(டிச., 16) காலை ஜாகிர் உசேன் காலமானார். அவரது மறைவினால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சிறுவயது முதலே மஹாராஷ்டிராவில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். சிறந்த இசை சேவைக்காக மத்திய அரசின் பத்மபூஷண், பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார் ஜாகிர் உசேன்.
1951ல் புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்காவாவுக்கு மும்பையில் மகனாக பிறந்த உசேன், தனது தந்தையால் மூன்று வயது முதலே தாள வாத்தியத்திற்கு அறிமுகப்படுத்தபட்டார். தொடர்ந்து உலகம் முழுக்க தனது தபேலா மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த ஆண்டு, பேலா ப்ளெக், எட்கர் மேயர் மற்றும் ராகேஷ் சவுராசியா ஆகியோருடன் பாஷ்டோவுக்கான சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி உட்பட மூன்று கிராமி விருதுகளை வென்றார்.