இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
உணர்வு பூர்வமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, உன்னதமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த நடிகர் சிவாஜி கணேசனின் வெள்ளித்திரைப் பயணத்தில் ஒரு உற்சாகமிகு கதை பின்னணியோடு ஒப்பற்ற நகைச்சுவைத் திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “ஊட்டி வரை உறவு”.
இயக்குநர் ஸ்ரீதரின் கதை, திரைக்கதை, வசனத்திலும், அவரது இயக்கத்திலும் பல உணர்வுபூர்வமான படங்களில் நடித்திருந்த நடிகர் சிவாஜி கணேசன், ஸ்ரீதரின் “காதலிக்க நேரமில்லை” திரைப்படம் போல் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கூடிய ஒரு மென்மையான காதல் கதைக்கான ஸ்கிரிப்டை தனக்காக தயார் செய்யுமாறு கூறினார்.
அப்படி இயக்குநர் ஸ்ரீதரும், 'சித்ராலயா' கோபுவும் மெரினா கடற்கரை ஓரம் அமைந்திருக்கும் காந்தி சிலை அருகே அமர்ந்து, படத்திற்கான ஸ்கிரிப்டை விவாதித்து இரண்டே மணி நேரத்தில் முடிவு செய்யப்பட்டது தான் “ஊட்டி வரை உறவு” படக்கதை. “காதலிக்க நேரமில்லை” போல் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை எடுக்க விரும்பிய கோவை செழியன் படத்தின் தயாரிப்பாளரானார். நடிகர் முத்துராமன், நாகேஷ், டிஎஸ் பாலையா, சச்சு என “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தில் நடித்திருந்த சில முக்கிய நடிகர்களை இத்திரைப்படத்திலும் பயன்படுத்தியிருந்தார் இயக்குநர் ஸ்ரீதர்.
இந்தப் படத்திற்கு இவர்கள் முதலில் வைத்த பெயர் “வயசு 16 ஜாக்கிரதை” பின்னர் “வயசு 18 ஜாக்கிரதை” என மாறி, அதன்பின் “ஊட்டி வரை உறவு” என்று பெயர் வைக்கப்பட்டது. “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தில் இரண்டாவது நாயகனாக வரும் நடிகர் ரவிச்சந்திரன், தன் காதலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஒரு போலியான அடையாளத்தைக் காட்டி, நடிகர் டிஎஸ் பாலையாவை ஏமாற்றுவது போல், இத்திரைப்படத்திலும் ஒரு போலியான அடையாளத்தைக் காண்பித்து நடிகர் டிஎஸ் பாலையாவை ஏமாற்றும் நாயகியாக நடிகை கேஆர் விஜயாவை நடிக்க வைத்திருப்பார் இயக்குநர் ஸ்ரீதர்.
“தேடினேன் வந்தது நாடினேன் தந்தது”, “அங்கே மாலை மயக்கம் யாருக்காக”, “பூமாலையில் ஓர் மல்லிகை”, “ஹேப்பி இன்று முதல் ஹேப்பி”, “ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்” என மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனின் மெல்லிசையில் இளமை ததும்பும் இனிய பாடல்கள் படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றன.
1967ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளிவந்த இத்திரைப்படம், பல திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடி, சிவாஜியின் வெற்றித் திரைப்படங்களின் வரிசையில் ஓர் தனி இடம் பிடித்தது.