ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'புஷ்பா 2'. இப்படம் முதல் நாளிலேயே வசூல் சாதனை படைத்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளுமே இப்படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருந்தது.
இப்படம் 10 நாட்களில் 1292 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இன்று 1300 கோடியை தாண்டியது. இப்படம் தெலுங்கில் மட்டும் 210 கோடிக்கு வியாபாரம் நடந்தது. கடந்த பத்து நாட்களில் அந்த வசூல் 270 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இப்போதுதான் 'பிரேக் ஈவன்' நிலையை அடைந்துள்ளது. இதற்கு மேல் வசூலாகும் தொகைதான் அங்கு லாபத்தைக் கொடுக்கும்.
அதே சமயம் மற்ற மாநிலங்களில் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக வசூலித்துள்ளதால் அங்கெல்லாம் மிகப் பெரிய லாபத்தை ஏற்கெனவே கொடுக்கத் துவங்கிவிட்டது. குறிப்பாக ஹிந்தியில் இப்படத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
'புஷ்பா 2' படம் எப்படியும் 1500 கோடியைக் கடந்துவிடும். இருந்தாலும் 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் வசூலை முறியடிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.