இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'புஷ்பா 2'. இப்படம் முதல் நாளிலேயே வசூல் சாதனை படைத்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளுமே இப்படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருந்தது.
இப்படம் 10 நாட்களில் 1292 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இன்று 1300 கோடியை தாண்டியது. இப்படம் தெலுங்கில் மட்டும் 210 கோடிக்கு வியாபாரம் நடந்தது. கடந்த பத்து நாட்களில் அந்த வசூல் 270 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இப்போதுதான் 'பிரேக் ஈவன்' நிலையை அடைந்துள்ளது. இதற்கு மேல் வசூலாகும் தொகைதான் அங்கு லாபத்தைக் கொடுக்கும்.
அதே சமயம் மற்ற மாநிலங்களில் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக வசூலித்துள்ளதால் அங்கெல்லாம் மிகப் பெரிய லாபத்தை ஏற்கெனவே கொடுக்கத் துவங்கிவிட்டது. குறிப்பாக ஹிந்தியில் இப்படத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
'புஷ்பா 2' படம் எப்படியும் 1500 கோடியைக் கடந்துவிடும். இருந்தாலும் 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் வசூலை முறியடிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.