தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான, விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் உள்ள ஒரு அரசு ஓட்டலை விலைக்கு கேட்டதாகவும், இதனால் புதுச்சேரி அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் விக்னேஷ் சிவன் மீது கடும் விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி அரசு ஓட்டலை விலைக்கு கேட்கவில்லை என்றும், படப்பிடிப்புக்கு அனுமதி கேட்கவே புதுச்சேரி சென்றேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார் விக்னேஷ்சிவன்.
இது குறித்து அவர் கூறுகையில், ‛‛நான் தற்போது இயக்கி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் படப்பிடிப்பை புதுச்சேரி விமான நிலையத்தில் நடத்த திட்டமிட்டு அதற்கான உரிய அனுமதி பெறுவதற்காக புதுச்சேரிக்கு சென்றேன். அந்த வகையில் புதுச்சேரி முதல் அமைச்சரையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு வந்தேன். நான் அவர்களை சந்தித்துவிட்டு வந்த பின்பு என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் ஒருவர் அவர்களை சந்தித்து சில விஷயங்கள் குறித்து கேட்டுள்ளார். அந்த விஷயங்கள் எனக்காக கேட்கப்பட்டதாக தவறுதலாக புரிந்து கொண்டு அதனை பரப்பி விட்டார்கள்.
அரசு ஓட்டலை நான் விலை பேசியதாக மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. இது ரசிக்கும்படியாக இருந்தாலும் இதில் எந்தவித உண்மையும் இல்லை. மேலும் இது போன்ற மீம்ஸ்கள் தேவையில்லாதது என்று நினைக்கிறேன். எனவேதான் இந்த விவகாரத்தில் எனது விளக்கத்தை தெரிவிக்கிறேன்''.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.