தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை திவ்யபாசுரம் ஆன்மிக கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் திருத்தண்டி நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றனர்.
இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:00 கோயிலுக்கு வந்த இவர்கள் மணவாள மாமுனிகள் சன்னதி, ஆண்டாள், பெரிய பெருமாள், பெரியாழ்வார், ராமானுஜர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின் இரவு 8:35 மணிக்கு திருப்பாவை திவ்யபாசுரம் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து திருத்தண்டி நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், இளையராஜா பேசினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் தென் பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக், அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீனிவாச வெங்கடேஷ அய்யங்கார் குழுவினர் செய்திருந்தனர்.