ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை இந்துமதி மணிகண்டன் தமிழில் கடைக்குட்டி சிங்கம், மெய்யழகன், காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம், டிராகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை நெடுந்தொடரிலும் நடித்து வருகிறார். தற்போது இந்துமதி அளித்த பேட்டி ஒன்றில் மெய்யழகன் படம் குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில், " மெய்யழகன் படம் மலையாளம், மராத்தி வேறு எந்தவொரு மொழிகளில் உருவாகி இருந்தாலும் படம் எவ்வளவு ஸ்லோவாக இருந்தாலும் அந்த படத்தினை ரசிகர்கள் ஏற்று கொண்டாடி இருப்பார்கள். தமிழில் இந்த மாதிரி படங்கள் வெளியாவதில்லை என ரசிகர்கள் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், மெய்யழகன் படம் வெளிவந்த போது ஸ்லோவாக உள்ளது. பேசிக்கிட்டே இருக்காங்க என பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் தமிழில் படத்தின் நீளத்தை குறைக்க வேண்டி இருந்தது. ஆனால், மெய்யழகன் படம் ஜெர்மனி நாட்டில் வெளியான போது அங்கு படத்திலிருந்து ஒரு நிமிட காட்சியை கூட குறைக்கவில்லை. அங்கு ரசிகர்கள் அனைவரும் ரசித்து வெற்றி படம் ஆக்கியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.