தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‛கோட்' படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் சிறிது நேரம் காண்பித்தனர். தற்போது விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன் படத்திலும் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.
இது குறித்து படை தலைவன் பட இயக்குனர் அன்பு கூறுகையில், ‛‛படை தலைவன் படத்தில் விஜயகாந்தை ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவைத்துள்ளோம். அவரது கேரக்டர் கண்டிப்பாக ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும். அதோடு இந்த படத்தில் விஜயகாந்த் நடித்த பொன்மனச் செல்வன் என்ற படத்தில் இடம் பெற்ற நீ பொட்டு வச்ச தங்ககுடம் என்ற பாடலை பயன்படுத்தி இருக்கிறோம். இந்த பாடலை லப்பர் பந்து படத்திலும் பயன்படுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பே நாங்கள் இந்த பாடலை வைத்து விட்டோம். எங்கள் படம் திரைக்கு வர தாமதம் ஆகிவிட்டது. குறிப்பாக விஜயகாந்த்துக்கும் அவரது மகன் சண்முக பாண்டியனுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடல் படை தலைவன் படத்தில் இடம் பெற்றுள்ளது'' என்கிறார்.