இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஐதராபாத்: புஷ்பா 2 படம் வெளியான திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 என்ற படம் அண்மையில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வசூலில் சக்கை போடு போடுகிறது.
புஷ்பா 2 படம் வெளியாகும் முதல்நாளில் நடந்த சிறப்பு காட்சிக்கு தியேட்டர் ஒன்றுக்கு நடிகர் அல்லு அர்ஜூன் படக்குழுவினருடன் பிரிமியர் ஷோவுக்கு வந்தபோது பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண், தமது 9 வயது மகனுடன் கூட்டத்தில் சிக்கினார். ரேவதி உயிரிழந்துவிட, மகன் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பெரும் பரபரப்பான இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் ஜாமினில் விடப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்தின் அடுத்த அதிர்ச்சியாக சிகிச்சையில் இருந்த 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுவன் சேர்க்கப்பட்டு உள்ள மருத்துவமனைக்கு ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஆனந்த், தெலுங்கானா சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டியானா உள்ளிட்டோர் சென்றனர். அங்கு சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவக்குழுவிடம் பேசினர்.
பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. எனவே அவர் குணம் அடைய நீண்ட காலம் பிடிக்கும். சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். விரைவில் இதுகுறித்த விரிவான அறிக்கையை அவர்கள் வெளியிடுவார்கள். செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிறுவன் மருத்துவமனையில் உள்ளார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ஏற்கனவே சிக்கலில் உள்ள நிலையில் சிறுவன் மூளைச்சாவு அடைந்திருப்பது பெரும் நெருக்கடி ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.