வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளிவந்த படம் 'அமரன்'. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம் ஓடிடியில் வெளியான பிறகும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று இப்படத்தின் 50வது நாள்.
இந்த வருடத்தில் ஒரு சில படங்கள்தான் 50 நாட்களைக் கடந்து ஓடியுள்ளன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படம் நிறைய லாபத்தைக் கொடுத்துள்ளது. அதனால், தெலுங்கிலும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் விரிவடைந்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.
அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படம் ஆகியவை வெளியாக உள்ளன. 'அமரன்' படத்தின் வெற்றியால் இந்தப் படங்களுக்கான வியாபாரத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.