ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இயக்குனர் பாலா இயக்கும் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள், பாலாவின் கைவண்ணத்தில் அதுவரை இல்லாத வகையில் தங்களிடம் இருக்கும் திறமைகளை முழுதாக வெளிப்படுத்தி அந்தப் படங்களின் மூலம் மிகப் பெரிய உயரத்திற்கு சென்றுள்ளார்கள். விக்ரம், சூர்யா, ஆர்யா, அதர்வா என ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அதேபோல அவருடைய படங்களில் நடிக்கும் புதுமுக நடிகர்கள் கூட மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறுவார்கள். அந்த வகையில் பிதாமகன் படத்தில் வில்லனாக நடித்த மகாதேவன் 'பிதாமகன் மகாதேவன்' என்று அழைக்கப்பட்டார்.
அதேபோல வெறும் ஸ்டண்ட் கலைஞராக இருந்த ராஜேந்திரன் நான் கடவுள் படத்தில் நடித்ததன் மூலம் நான் கடவுள் ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் அளவிற்கு பிரபலமானார். இப்போது வரை அவரது திரையுலாக் பயணம் பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது வணங்கான் படத்தில் நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவியும், நடிகை வரலட்சுமியின் தாயாருமான சாயாவை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அறிமுகப்படுத்தியுள்ளார் பாலா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள தனது அம்மா சாயாவுடன் வந்த வரலட்சுமி இந்த தகவலை வெளிப்படுத்தினார்.