பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
ஹைதராபாத் : “ஹைதராபாத் தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியானது குறித்து கூறப்பட்ட போதும், நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு உடனே வெளியேற மறுத்தார்,” என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த 4ம் தேதி நடிகர்கள் அல்லு அர்ஜுன் நடித்த, 'புஷ்பா - 2 தி ரூல்' என்ற படத்தின் சிறப்பு இரவு காட்சி திரையிடப்பட்டது.
இந்த படத்தை முதல் நாளே பார்ப்பதற்காக ரேவதி, 35, என்பவர் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது ரசிகர்களுடன் படத்தை பார்ப்பதற்காக படத்தின் நாயகனான அல்லு அர்ஜுனும் வந்தார். அவரை பார்ப்பதற்காக தியேட்டருக்குள் கூட்டம் அலைமோதியது. இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி மற்றும் அவரது 12 வயது மகன் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர். இது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், அல்லு அர்ஜுன் மீதான நடவடிக்கை சரியானது தான் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் நேற்று விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது: புஷ்பா படத்தை பார்ப்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வருவதாகக் கூறி டிச., 2ல் போலீசில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி, போலீசார் அந்த மனுவை நிராகரித்துவிட்டனர். அனுமதி மறுத்த பிறகும், நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்தார். வரும் போது, காரின் மேற்புறத்தில் உள்ள ஜன்னலை திறந்து, அதன் வழியே நின்றவாறு ரோட் ஷோ நடத்தினார்.
இதன் காரணமாகவே கூட்டநெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழந்த தகவல் தெரிந்தும் தியேட்டரை விட்டு அவர் உடனே வெளியேறவில்லை. போலீசார் அவரை வெளியேற்றினர். இதுபோன்ற கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தவர்களுக்கு சலுகைகள் வழங்க முடியாது. நான் முதல்வராக இருக்கும் வரை இனி தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து அல்லு அர்ஜுன் கூறுகையில், ''முதல்வரின் குற்றச்சாட்டுகள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. தியேட்டருக்கு செல்லும் போது நான் எந்த ரோட்ஷோவும் நடத்தவில்லை. வாகனத்தில் இருந்தபடி ரசிகர்களை பார்த்து கையை தான் அசைத்தேன்,'' என்றார்.