ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார் ஜெயம் ரவி. இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜெயம் ரவி - ஆர்த்தி இருவருமே ஆஜராகி இருந்தார்கள். அப்போது ஜெயம் ரவி - ஆர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மத்தியஸ்தர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள்.
அதைக் கேட்ட நீதிபதி, ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் மனம் விட்டு பேசுங்கள். மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து அவர்கள் இருவரிடத்திலும் ஒரு மணி நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த விசாரணையின்போது, அவர்கள் இருவரும் தாங்கள் மீண்டும் சேர்ந்து வாழப் போவதாக அறிவிப்பார்கள் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.