தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகர் ரவி மோகன் தனது மனைவியை பிரிந்து விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்து குற்றம் சாட்டி வந்த நிலையில் கோர்ட் அறிவுரையை ஏற்று இருவரும் விமர்சிப்பதை தவிர்த்தனர்.
இதனிடையே ரவி மோகன் தனது மூத்த மகன் ஆரவின் 15வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளின்போது மகன்கள் ஆரவ், அயான் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு 'என் குறும்பர்கள்' என பதிவிட்டு இருந்தார் ரவி மோகன்.
இந்நிலையில் 'எச்சரிக்கையாக இருக்கவும், சூழ்ச்சி கூட அன்பு போன்று தெரியும்' என இன்ஸ்டாவின் ஸ்டோரியில் பதிவிட்டார் ஆர்த்தி. பின்னர் அதை நீக்கி விட்டார்.