தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைக்கு வந்த புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறப்பு காட்சியை காண அல்லு அர்ஜுனும் சென்றதால், அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தான் அந்த பெண் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அல்லு அர்ஜுன் மீது காவல்துறை கைது நடவடிக்கை எடுத்தது. மறுநாளே அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நேரத்தில் அல்லு அர்ஜுனின் செயல்பாட்டை தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்த நிலையில், தெலுங்கானாவில் எந்த திரைப்படங்களின் சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருக்கிறார்.
இந்த நேரத்தில் நேற்று உஸ்மானியா என்ற பல்கலைக்கழத்தைச் சேர்ந்த மாணவர்கள் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள். இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், ‛‛உங்களது உணர்வுகளை எப்போது போன்று பொறுப்புடன் பதிவு செய்யுங்கள். அதேசமயம் தவறான கருத்துக்களை யாரும் பதிவு செய்ய வேண்டாம். முக்கியமாக என்னுடைய ரசிகர்கள் என்ற பெயரில் போலியான சமூகவலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டு அவதூறு கருத்துக்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு போலி சமூக வலைதள பதிவுகளுக்கு எனது ரசிகர்கள் யாரும் ஆதரவளிக்க வேண்டாம்'' என்று குறிப்பிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.