ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
காதலித்து திருமணம் செய்து கொண்டு அழகாக குடும்பம் நடத்தும் நட்சத்திர ஜோடிகளில் சூர்யா - ஜோதிகா தம்பதியினர் குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கின்றனர். திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்பம் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி ஆகியவற்றிற்காக படங்களில் நடிப்பதை தவிர்த்த ஜோதிகா, குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு தற்போது செலெக்ட்டிவான நல்ல கதையைம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை முன்னிட்டு மும்பைக்கு குடி பெயர்ந்து உள்ளனர் சூர்யா - ஜோதிகா தம்பதியினர்.
பெரும்பாலும் நட்சத்திரங்கள் தங்களது குழந்தைகளை வெளியுலகுக்கு அவ்வளவாக காட்டுவதை விரும்புவதில்லை. சூர்யாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோரின் புகைப்படங்கள் எப்போதாவது ஒருமுறை தான் மீடியாக்களில் வெளியாகி வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற சூர்யா - ஜோதிகா இருவரும் தியா, தேவ் இருவரையும் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். அது மட்டுமல்ல புகைப்படக்காரர்கள் தங்களை புகைப்படம் எடுப்பதற்கு அழகாக பொறுமையாக போஸும் கொடுத்துள்ளனர். இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.