படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சிவகுமார் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று 'நெருப்பிலே பூத்த மலர்'. இதில் பூர்ணிமா ஜெயராம் அவரது ஜோடியாக நடித்தார். இவர்கள் தவிர சத்தார், வி.கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் நடித்தனர். கவுசி என்பவர் இயக்கினார். இந்த படத்தின் கதைப்படி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சிவகுமாரும், பூர்ணிமாவும் காதலிப்பார்கள். ஆனால் இவர்களின் காதலை சிவகுமாரின் அப்பா ஏற்கவில்லை. அவர்களை பிரித்து, மகனை பாதிரியார் ஆக்குகிறார். பல வருடங்களுகு பிறகு பூர்ணிமா ஆசிரியையாக பணியாற்றும் பள்ளிக்கே சிவகுமார் பாதராக செல்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
படத்தின் கிளைமாக்ஸில் சிவகுமார் ஒரு பெண்ணை கெடுத்து விட்டதாக கருதும் ஊர் பொதுமக்கள் அவரை தெருவில் ஓடவிட்டு கல்லால் அடிப்பார்கள்.
படத்தின் பணிகள் முடிந்ததும் சிவகுமார் தனது நண்பர்களுக்கு படத்தை போட்டுக் காட்டினார். அந்த சிறப்பு காட்சிக்கு சிவகுமாரின் மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் வந்திருந்தார்கள். சூர்யாவுக்கு 8 வயது கார்த்திக்கு 6 வயது. கிளைமாக்சில் சிவகுமார் அடிவாங்குவதை பார்த்த கார்த்தி 'அப்பாவை அடிக்காதீங்க... அப்பாவை அடிக்காதீங்க' என்று கதறி அழுதார். படம் விட்டு வெளியில் வந்தும் கார்த்தி அழுவதை நிறுத்தவில்லை. கார்த்திக்கிற்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தும் அன்று முழுக்க அழுது கொண்டே இருந்தாராம் கார்த்தி. பின்னர்தான் சினிமா வேறு, நிஜம் வேறு என மகனுக்கு புரிய வைத்தார் சிவகுமார்.