மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

'புஷ்பா 2' பட பிரிமியர் காட்சி கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்த விவகாரம், தெலங்கானா மாநில அரசியலிலும், தெலுங்குத் திரையுலகத்திலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த விவகாரத்தில் கைதாகி ஜாமினில் உள்ள படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் போலீஸ் விசரணைக்கு ஆஜரானார். இந்த விவகாரத்தில் தெலங்கானா முதல்வருடன் தெலுங்குத் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததாக ஏற்கெனேவ தகவல் வெளியானது.
இந்நிலையில் தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக புதிதாகப் பொறுப்பேற்ற தயாரிப்பாளர் தில் ராஜு தற்போது களமிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்து ஒரு தீர்வு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, படுகாயமடைந்த சிறுவன் தற்போது உடல்நலம் தேறியுள்ளதாகவும், இத்தனை நாட்களாக கோமாவில் இருந்த சிறுவனுக்கு நினைவு திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.