தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இசையமைப்பாளர் இளையராஜா பீக்கில் இருந்த காலகட்டத்தில் தான் தனது இசை பயணத்தை துவங்கினார் ஏ.ஆர் ரஹ்மான். முதல் படத்திலேயே அற்புதமான பாடல்களையும் வித்தியாசமான இசையையும் கொடுத்ததால் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் பார்வை அவர் பக்கம் திரும்பியது. இளையராஜா பிசியாக இருந்தார் என்பதும் ஏ.ஆர் ரஹ்மானின் வளர்ச்சிக்கு இன்னொரு காரணமாக அமைந்தது. அதேசமயம் ஏ.ஆர் ரஹ்மான் சினிமாவில் இசையமைப்பதற்கு முன்பாக பல இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து அவர்களது குழு நடத்தும் நிகழ்ச்சிகளில் வாசித்துக் கொண்டிருந்தார். பெரும்பாலும் ஏற்கனவே ஹிட்டான சினிமா பாடல்களை அப்படியே இசையமைப்பது தான் ஏ.ஆர் ரஹ்மான் வழக்கமாக இருந்ததாம்.
அப்படி ஒருமுறை அவர் வாசித்தபோது ஒரு குழுவில் இருந்த ஒரு கிடாரிஸ்ட் போதையில் ஏ.ஆர் ரஹ்மானிடம் ஒரு நாள், எதற்கு ஏற்கனவே வந்த ஒன்றை காப்பி அடித்துக் கொண்டிருக்கிறாய். உனக்கென தனித்துவமான ஒன்றை உருவாக்க முயற்சி செய் என்று விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அந்த விமர்சனம் தான் தனக்கான பாதையை தேர்ந்தெடுக்க வழிகாட்டியாக அமைந்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஏ.ஆர் ரஹ்மான். அப்படி அந்த கிடாரிஸ்ட் கூறிய பிறகு இப்படி குழுக்களில் சேர்ந்து வாசிப்பதை நிறுத்திவிட்டு, சொந்தமாகவே புது வகையான இசையை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டேன் என்று கூறியுள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.