ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த மகாராஜா என்ற படம் 100 கோடி வசூல் சாதனை செய்த நிலையில், தற்போது அந்த படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை அடுத்து ஜப்பான் மொழியிலும் அப்படம் வெளியாக உள்ளது. மேலும், தற்போது ‛ஏஸ், ட்ரெயின்' படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி, பிக்பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛எனது மகன், மகளிடத்தில் நான் அப்பா என்று ஒருபோதும் அதிகாரம் செய்வதில்லை. அவர்களிடத்தில் நானும் ஒரு குழந்தை போன்றுதான் என்னை வெளிப்படுத்துகிறேன். அதோடு எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவர்கள் இருவரிடத்திலும் கருத்து கேட்பேன். அவர்களின் கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுப்பேன். முக்கியமாக படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் விஷயங்களை குடும்பத்தாரிடத்திலும் பகிர்ந்து கொள்வேன்'' என்று கூறியுள்ள விஜய் சேதுபதி, ‛‛என் மகன், மகளை பெயரைச் சொல்லி நான் அழைப்பதில்லை. என் மகன் சூர்யாவை அப்பா என்றும், மகள் ஸ்ரீஜாவை அம்மா என்றும்தான் நான் அழைத்து வருகிறேன்'' என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.