ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 25 நாட்கள் ஆகிறது.
1700 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்திருந்தாலும் தெலுங்கு மொழியில் வெளியான ஆந்திர, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டதே காரணம் என்கிறார்கள். தெலுங்கு மாநிலங்களில் 'சிடட்' என அழைக்கப்படும் ஏரியாவில் மட்டும் லாபத்தைப் பெற்றுள்ளதாம். சில ஏரியாக்களில் நஷ்டமும், சில ஏரியாக்களில் நஷ்டமில்லாத விதத்தில் வசூலையும் பெற்றுள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
அது போல அமெரிக்காவில் கூட அதிக விலைக்கு விற்கப்பட்டதால் அங்கும் குறைவான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது. ஹிந்தியில் மிகப் பெரும் லாபத்தைப் படம் பெற்றுக் கொடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகாவில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைத்துள்ளது. கேரளாவில் எதிர்பார்த்த வசூல் இல்லாத காரணத்தால் நஷ்டம் வரலாம் எனத் தகவல்.
பொங்கல் வரை பெரிய படங்கள் இல்லாததால் இன்னும் பத்து நாட்களுக்கு 'புஷ்பா 2' படம் சில தியேட்டர்களில் ஓட வாய்ப்புள்ளது.