தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 25 நாட்கள் ஆகிறது.
1700 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்திருந்தாலும் தெலுங்கு மொழியில் வெளியான ஆந்திர, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டதே காரணம் என்கிறார்கள். தெலுங்கு மாநிலங்களில் 'சிடட்' என அழைக்கப்படும் ஏரியாவில் மட்டும் லாபத்தைப் பெற்றுள்ளதாம். சில ஏரியாக்களில் நஷ்டமும், சில ஏரியாக்களில் நஷ்டமில்லாத விதத்தில் வசூலையும் பெற்றுள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
அது போல அமெரிக்காவில் கூட அதிக விலைக்கு விற்கப்பட்டதால் அங்கும் குறைவான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது. ஹிந்தியில் மிகப் பெரும் லாபத்தைப் படம் பெற்றுக் கொடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகாவில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைத்துள்ளது. கேரளாவில் எதிர்பார்த்த வசூல் இல்லாத காரணத்தால் நஷ்டம் வரலாம் எனத் தகவல்.
பொங்கல் வரை பெரிய படங்கள் இல்லாததால் இன்னும் பத்து நாட்களுக்கு 'புஷ்பா 2' படம் சில தியேட்டர்களில் ஓட வாய்ப்புள்ளது.