துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் புஷ்பா-2 படம் வெளியானபோது ஆந்திராவில் உள்ள சந்தியா திரையரங்கில் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதன் காரணமாக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனை கடுமையாக விமர்சித்ததோடு, தெலுங்கானாவில் நான் முதலமைச்சராக இருக்கும் வரை எந்த படங்களுக்கும் ஸ்பெஷல் ஷோவுக்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமினில் வந்துள்ளார். தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.
இப்படியான நிலையில், 2025ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியாக உள்ள ராம் சரணின் கேம் சேஞ்சர், பாலகிருஷ்ணாவின் டக்கு மகாராஜ், வெங்கடேஷின் சங்கராந்திகி வஸ்துனம் போன்ற படங்களின் ஸ்பெஷல் ஷோக்களை திரையிடுவதற்கு ஆந்திரா அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதோடு இந்த மூன்று படங்களின் டிக்கெட் விலையும் உயர்த்தப்பட உள்ளதாம்.