கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கியுள்ள 'வணங்கான்' படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. இதில் அருண் விஜய், ரோஷினி வெங்கடேஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் தமிழகத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பாலா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 'வணங்கான்' என்றால் எதற்கும் வணங்காதவன், அடிபணியாதவன் என்று பொருள். படத்தின் நாயகனும் அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவன். அவன் மனது வைத்தால் தவிர அவனிடமிருந்து யாராலும் எதையும் பெற முடியாது. ஜெயமோகன் எழுதிய ஒரு சிறுகதையின் தலைப்பு தான் வணங்கான். அவரின் அனுமதி பெற்று இந்த தலைப்பை பயன்படுத்தி இருக்கிறேன்.
எந்த கதையையும் நான் தீர்மானம் பண்ணுறதில்லை. இந்தச் சமூகம் எனக்கு ஒரு கதையை தருகிறது. 'இதைக் கண்டும் காணாமல் விட்டுவிடாதே, திரையில் கொண்டு வா' என்று என் முதுகை பிடித்து தள்ளுகிறது. வணங்கானில் முக்கியமான ஒரு சம்பவம் வருகிறது. அது உண்மைச் சம்பவம். அதை நான் எடுத்திருக்கேன். 'இந்த உண்மைச் சம்பவத்தைத் திரையில் கொண்டு வராவிட்டால் நீ சமூகத்தில் வாழ்ந்தே பலன் இல்லை'ன்னு எனது உள் மனசு ராத்திரியெல்லாம் தூங்கவிடாமல் செய்தது. அதனால்தான் அந்த சம்பவத்தை படமாக்கி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.