ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கியுள்ள 'வணங்கான்' படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. இதில் அருண் விஜய், ரோஷினி வெங்கடேஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் தமிழகத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பாலா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 'வணங்கான்' என்றால் எதற்கும் வணங்காதவன், அடிபணியாதவன் என்று பொருள். படத்தின் நாயகனும் அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவன். அவன் மனது வைத்தால் தவிர அவனிடமிருந்து யாராலும் எதையும் பெற முடியாது. ஜெயமோகன் எழுதிய ஒரு சிறுகதையின் தலைப்பு தான் வணங்கான். அவரின் அனுமதி பெற்று இந்த தலைப்பை பயன்படுத்தி இருக்கிறேன்.
எந்த கதையையும் நான் தீர்மானம் பண்ணுறதில்லை. இந்தச் சமூகம் எனக்கு ஒரு கதையை தருகிறது. 'இதைக் கண்டும் காணாமல் விட்டுவிடாதே, திரையில் கொண்டு வா' என்று என் முதுகை பிடித்து தள்ளுகிறது. வணங்கானில் முக்கியமான ஒரு சம்பவம் வருகிறது. அது உண்மைச் சம்பவம். அதை நான் எடுத்திருக்கேன். 'இந்த உண்மைச் சம்பவத்தைத் திரையில் கொண்டு வராவிட்டால் நீ சமூகத்தில் வாழ்ந்தே பலன் இல்லை'ன்னு எனது உள் மனசு ராத்திரியெல்லாம் தூங்கவிடாமல் செய்தது. அதனால்தான் அந்த சம்பவத்தை படமாக்கி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.