திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவான தெலுங்குப் படமான 'புஷ்பா 2', பான் இந்தியா படமாக கடந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியானது. படம் வெளியாகி தற்போது நான்கு வாரங்கள் முடிவடைந்துள்ளது.
இந்த நான்கு வாரங்களில் உலகம் முழுவதும் 1799 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்த வசூலை மட்டுமே தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மொழி வாரியாக, மாநிலங்கள் வாரியாக அவர்கள் வெளியிடுவதில்லை. இருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் விசாரித்தவரையில் கிடைத்த வசூல் தகவல்கள் இதோ..
ஹிந்தியில் மட்டும் இப்படம் 900 கோடி வசூலையும், தெலுங்கில் 350 கோடி வசூலையும், தமிழகத்தில் 75 கோடி வசூலையும், கர்நாடகாவில் 95 கோடி வசூலையும், கேரளாவில் 15 கோடி வசூலையும், வெளிநாடுகளில் 364 கோடி வசூலையும் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதுவரை தெலுங்குத் திரைப்படங்களில் 'பாகுபலி 2' படம் ஆந்திரா, தெலங்கானாவில் 415 கோடி வசூலை அள்ளியது. ஆனால், 'புஷ்பா 2' படம் அந்த சாதனையை முறியடிக்காமல் 350 கோடி வசூலை பெற்றுள்ளது.