தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி ஹைதராபாத்தில் நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவருடைய பத்து வயது மகன் ஒரு மாத காலத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சிறப்புக் காட்சியில் மரணம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில், இனி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, டிக்கெட் கட்டண உயர்வு கிடையாது என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த வார வெள்ளிக்கிழமை 'கேம் சேஞ்சர்' மற்றும் அடுத்த வாரம் சங்கராந்தியை முன்னிட்டு 'டாகு மகாராஜ், சங்கராந்தி வஸ்துனம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
அப்படங்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி, டிக்கெட் கட்டண உயர்வு ஆகியவற்றை ஆந்திர மாநில அரசு அறிவித்துவிட்டது. ஆனால், தெலங்கானா அரசு ஏற்கெனவே அறிவித்த அறிவிப்பைத் தொடரப் போகிறதா அல்லது இறங்கி வருமா என திரையுலகினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், 'கேம் சேஞ்சர், சங்கராந்தி வஸ்துனம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அதனால், அவர் முயற்சி செய்து அனுமதி வாங்கிவிடுவார் என தெலுங்குத் திரையுலகினர் நம்புகிறார்கள்.
இந்த அனுமதி விவகாரத்தில் தெலங்கானா அரசு கண்டிப்புடன் தொடரப் போகிறதா அல்லது கனிவாக நடந்து கொள்ளுமா என ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.