தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இசை அமைப்பாளர் கங்கை அமரன் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சிவகங்கை மற்றும் மானா மதுரை பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக சிவகங்கை சென்ற கங்கை அமரன் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக மானா மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்கு அங்கு போதிய வசதிகள் இல்லாததால் அவர் சிவகங்கை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் அவர் உடல் நலத்தில் என்ன பிரச்னை என்பதை தெரிவிக்கவில்லை.
இன்று அவர் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார். இதை தொடர்ந்து கங்கை அமரனின் மகன்களான வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி மதுரை சென்றுள்ளனர்.