ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி 2' படம் தந்த பான் இந்தியா வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் வெளியான அனைத்து முக்கியமான பான் இந்தியா படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அவற்றில் பாலிவுட் நடிகைகள்தான் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள்.
பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ' படத்தில் ஷ்ரத்தா கபூர், ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஆலியா பட், 'கல்கி 2898 ஏடி' படத்தில் தீபிகா படுகோனே, 'தேவரா' படத்தில் ஜான்வி கபூர் என பாலிவுட் நடிகைகள் நடித்திருந்தார்கள். தற்போது வெளியாக உள்ள 'கேம் சேஞ்ஜர்' படத்திலும் பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி தான் நடித்துள்ளார்.
'புஷ்பா 1, 2' படங்களில் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, 'சலார்' படத்தில் தமிழ் நடிகையான ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஹிந்தி கதாநாயகி இல்லை என்றாலும் 'புஷ்பா 2' படம் இந்திய அளவில் நம்பர் 1 வசூலைக் குவித்தது. ஆக, படத்தின் வெற்றி, கதாநாயகி யார் என்பதில் இல்லை என்பதை 'புஷ்பா 2' படத்தின் வெற்றி புரிய வைத்துள்ளது.