அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
எழுத்தாளர் கோமல் சாமிநாதன் எழுதி நடத்தி வந்த நாடகத்தை பார்த்த கே.பாலச்சந்தர் அதனை படமாக்க விரும்பினார். கோவில்பட்டி அருகில் உள்ள அத்திப்பட்டி என்ற கிராமத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்தும், அதற்காக அந்த மக்கள் நடத்தும் போராட்டம் குறித்தும் பேசிய படம் 'தண்ணீர் தண்ணீர்'. சரிதாதான் கதையின் நாயகி. அவருடன் வாத்தியார் ஆர்.கே.ராமன், ஏ.கே.வீராசாமி, ராதாரவி, குகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பி.எஸ்.லோகநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
படம் வெளியாகி வணிகரீதியாவும் பெரிய வெற்றி பெற்றது. விருதுகளையும் குவித்தது. சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை என இரண்டு தேசிய விருதுகளை பெற்றது. இந்த படத்தில் நடித்த சரிதாவும், 'உமரோ ஜான்' என்ற பாலிவுட் படத்தில் நடித்த ரேகாவும் இறுதிச்சுற்று வரை வந்தனர். கடைசியில் நடுவர்களிடையே நடந்த வாக்கெடுப்பில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தேசிய விருதை இழந்தார் சரிதா. வடநாட்டு கலைஞர்கள் அதிகம் அந்த குழுவில் இருந்ததால் மொழி அடிப்படையில் அவர்கள் வாக்களித்தாக அப்போது விமர்சனம் செய்யப்பட்டது.