வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

எழுத்தாளர் கோமல் சாமிநாதன் எழுதி நடத்தி வந்த நாடகத்தை பார்த்த கே.பாலச்சந்தர் அதனை படமாக்க விரும்பினார். கோவில்பட்டி அருகில் உள்ள அத்திப்பட்டி என்ற கிராமத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்தும், அதற்காக அந்த மக்கள் நடத்தும் போராட்டம் குறித்தும் பேசிய படம் 'தண்ணீர் தண்ணீர்'. சரிதாதான் கதையின் நாயகி. அவருடன் வாத்தியார் ஆர்.கே.ராமன், ஏ.கே.வீராசாமி, ராதாரவி, குகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பி.எஸ்.லோகநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
படம் வெளியாகி வணிகரீதியாவும் பெரிய வெற்றி பெற்றது. விருதுகளையும் குவித்தது. சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை என இரண்டு தேசிய விருதுகளை பெற்றது. இந்த படத்தில் நடித்த சரிதாவும், 'உமரோ ஜான்' என்ற பாலிவுட் படத்தில் நடித்த ரேகாவும் இறுதிச்சுற்று வரை வந்தனர். கடைசியில் நடுவர்களிடையே நடந்த வாக்கெடுப்பில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தேசிய விருதை இழந்தார் சரிதா. வடநாட்டு கலைஞர்கள் அதிகம் அந்த குழுவில் இருந்ததால் மொழி அடிப்படையில் அவர்கள் வாக்களித்தாக அப்போது விமர்சனம் செய்யப்பட்டது.