ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'நாச்சியார், வர்மா' படங்களுக்கு பிறகு பாலா இயக்கி உள்ள படம் 'வணங்கான்'. அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார். அவர்களுடன் சமுத்திரகனி, மிஷ்கின், ராதாரவி, சிங்கம்புலி, அருள்தாஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 10ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது.
இந்த படம் குறித்து நடிகர் அருண் விஜய் கூறும்போது, ''இந்த வணங்கான் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு படமாக இருக்கும். அந்த அளவுக்கு மிகவும் எதார்த்தமான ஒரு கதையில் உருவாகியுள்ளது. அதோடு இந்த வணங்கான், பாலா எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தும் ஒரு படமாகவும் இருக்கும். பாலா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது'' என்கிறார்.