தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'நாச்சியார், வர்மா' படங்களுக்கு பிறகு பாலா இயக்கி உள்ள படம் 'வணங்கான்'. அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார். அவர்களுடன் சமுத்திரகனி, மிஷ்கின், ராதாரவி, சிங்கம்புலி, அருள்தாஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 10ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது.
இந்த படம் குறித்து நடிகர் அருண் விஜய் கூறும்போது, ''இந்த வணங்கான் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு படமாக இருக்கும். அந்த அளவுக்கு மிகவும் எதார்த்தமான ஒரு கதையில் உருவாகியுள்ளது. அதோடு இந்த வணங்கான், பாலா எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தும் ஒரு படமாகவும் இருக்கும். பாலா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது'' என்கிறார்.