இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் சிம்பு நடித்த ஈஸ்வரன், ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். தெலுங்கில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ராஜா சாப் மற்றும் பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஒரு நபர் மூலமாக சைபர் தாக்குதலுக்கு ஆளாகி வந்துள்ளார் நிதி அகர்வால்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையில் தற்போது அந்த நபர் மீது புகார் அளித்துள்ளார் நிதி அகர்வால். அந்த புகாரில் அவர் கூறும்போது, சம்பந்தப்பட்ட அந்த நபர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தன்னுடைய பெயரை களங்கப்படுத்தும் விதமாக தரக்குறைவான மெசேஜ்களை தொடர்ந்து அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளதோடு அதற்கான ஆதாரங்களையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தான் மலையாள நடிகை ஹனிரோஸ், இப்படி தன் மீது சைபர் தாக்குதல் நடத்திய நபர் மீது காவல் துறையில் புகார் அளித்து அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.