தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா பல வருடங்களாக கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளியும் 'நேசிப்பாயா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி உள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார் ஆகாஷ் முரளி. இப்போது அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "நான் சிறுவயதில் அப்பா உடன் படப்பிடிப்பிற்கு செல்வேன். சினிமா மீதான ஆர்வம் அப்போது இருந்தே வளர்ந்தது. அப்பாவை போன்றே நானும் நடிகனாக வேண்டும் என்ற கனவும் பெருகியது. ஆனால் டிகிரி முடிக்காமல் சினிமாவிற்கு வரக்கூடாது என்று அப்பா கூறிவிட்டார். அதன்பிறகு எனக்கு பிடித்த எம்.பி.ஏ படிப்பை படித்து முடித்தேன். இப்போது சினிமாவில் நடிக்கிறேன்" என்றார்.