தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மார்க் ஆண்டனி, ரத்னம் படங்களுக்கு பிறகு, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த 'மதகஜராஜா' படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட விஷால், மேடையில் மைக்கை பிடித்து பேசும்போதே அவரது கைகள் நடுங்கியது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அந்த வீடியோ வெளியானதை அடுத்து அவரைப் பற்றி பல்வேறு விதமான செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தான் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி, விஷால் குறித்து கூறுகையில், விஷால் ஒரு தைரியமானவர். இப்போது ஏதோ ஒரு மோசமான கட்டத்தில் இருந்து வருகிறார். இதிலிருந்து கண்டிப்பாக அவர் மீண்டு வருவார். அதற்கு அவரது தைரியமே அவருக்கு துணை நிற்கும். அதோடு என் நண்பன் விஷாலின் நல்ல மனசுக்கும், அவரது பெற்றோரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக மீண்டும் அவர் சிங்கம் போல் மீண்டு வருவார் என்று தனது நம்பிக்கையை தெரிவித்தார் ஜெயம் ரவி.