நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது அவற்றிற்கு நடுஇரவு 1 மணி காட்சிகள், அதிகாலை 4 மணி காட்சிகள் என தென்னிந்திய மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் 'துணிவு' பட அதிகாலை காட்சியின் போது இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். அதன்பின் தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கான அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டது.
கடந்த மாதம் 'புஷ்பா 2' படம் வெளிவந்த போது ஹைதராபாத்தில் நடந்த நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தெலங்கானா அரசு அறிவித்தது. ஆனால், 'கேம் சேஞ்ஜர்' படத்திற்கு யு டர்ன் போட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து தெலங்கானா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி பல கேள்விகளை எழுப்பினார். அனுமதி தர மாட்டோம் என்று சொல்லிவிட்டு அனுமதி வழங்கியது ஏன் என்றும் கேட்டார். தூக்கத்தைக் கெடுத்து சினிமா பார்க்க வேண்டுமா என்றும் கேட்டுள்ளார். வழக்கை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
இதனிடையே, ஆந்திர உயர்நீதிமன்றம் இது குறித்து தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி அனுமதி வழங்கப்பட்ட அதிகாலை 1 மணி 4 மணி காட்சிகளை ரத்து செய்துள்ளது. அதனால், பொங்கல் வெளியீட்டில் எந்த தெலுங்குப் படத்திற்கும் அதிகாலை காட்சிகள் நடக்காது.
வரும் நாட்களில் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சிறப்புக் காட்சிகள், சிறப்புக் கட்டண உயர்வு ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்பில்லை. நீதிமன்றம் தலையிட்டுவிட்டதால் மாநில அரசுகள் அப்படியான அனுமதியிலிருந்து பின் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.