ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தை தொடர்ந்து தமிழ், அதன் பிறகு அப்படியே தெலுங்கு திரையுலகில் நுழைந்து தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டார். பிரேமம் என்கிற காதல் படத்தில் நடித்த இவர் தற்போது காதல் குறித்து அதிர்ச்சி அளிக்கும் விதமான ஒரு கருத்தை கூறியுள்ளார்.
அதாவது காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் இந்த சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட போது, “ஐ லவ் யூ பார் எவர்” என்று சொல்வதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய பொய். காரணம் எங்கேயும் நடக்காத ஒன்று இது. அது மட்டுமல்ல நீதான் என் உயிர், நீ இல்லாமல் நான் இல்லை இது போன்ற டாக்ஸிக் காதலில் சிக்கி இருப்பவர்கள் தயவு செய்து இப்போதே ஓடிவிடுங்கள் என்பது தான் என்னுடைய சிம்பிளான அறிவுரை” என்றும் கூறியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
காதல் மீது இவருக்கு என்ன இவ்வளவு வெறுப்பு என்று ரசிகர்கள் குழம்பி போய் இருக்கின்றனர்.