தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள சினிமாவில் இயக்குனர் மற்றும் பிரபல நடிகராக வலம் வருபவர் பசில் ஜோசப். இவர் கோதா, மின்னல் முரளி உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிகர் சூர்யாவிடம் பசில் ஜோசப் புதிய படத்திற்காக ஒரு கதையை கூறியுள்ளார். இது சூப்பர் ஹீரோ சம்மந்தப்பட்ட படம் என்கிறார்கள். இதுதொடர்பாக நடந்து வரும் பேச்சுவார்த்தை தற்போது இறுதிகட்டத்தை நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் உள்ளது. இந்த படங்களை முடித்த பிறகு பசில் ஜோசப் கதையில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த படங்கள் தவிர்த்து கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் மே 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது.