தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவின் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
திருப்பூரை சேர்ந்த டி.எம் ஜெயமுருகன் 1995ல் 'சிந்து பாத்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். முரளி நடித்த ‛ரோஜா மலரே' படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, அடடா என்ன அழகு, தீ இவன் போன்ற படங்களையும் இயக்கினார். தனது படம் உட்பட ஓரிரு படங்களுக்கு இசையமைக்கவும் செய்தார்.
ஒருக்கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது உடல். இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.